பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் – 102 வயது முதியோர் கெளரவிப்பு.!!!
(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு வீரமுனை கிராமத்தில் வசித்து வரும் எஸ்.ரத்னம் எனும் 102 வயதுடைய முதியோரினை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (13) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இதேவேளை முதியோர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலக பிரிவில் சிறந்த சமூக சேவையாளராக செயற்பட்ட கே.வெள்ளையன் என்பவரும், சிறந்த கலைஞசராக ஏ.அஸீஸ் ஆகிய இரு முதியோர்களும் பிரதேச செயலாளரினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.வாஸீத் அஹமட், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் (பயிற்சி) எம்.சத்ய செரூபன், சமூக சேவை உத்தியோகத்தர் அ.அகமட் சபீர், சமூக சேவை பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



