ஓட்டமாவடி பொதுச் சுகாதாரப் பணிமனைக்கு குளிரூட்டிகள் கையளிப்பு.!!!
கடந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களினால் ஓட்டமாவடி பொதுச் சுகாதாரப் பணிமனையின் இரு அறைகளுக்கு குளிரூட்டிகளைப் பொருத்தி நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட குளிரூட்டிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கடந்த (10) திங்கள் அன்று ஓட்டமாவடி பொதுச்சுகாதாரப் பணிமனையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி Dr.MHM.தாரிக் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் AL. நௌபர் மற்றும் பொதுச்சுகாதாரப் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


