உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 12, 2025

Hot News

அரச நிறுவனங்களில் நிலவும்; வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய – 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்யத் திட்டம்.!!!

அரசு நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சில அரசுத் துறைகளுக்குக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், இதன் விளைவாக அதிகாரிகள், குறிப்பாகக் களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குக் குறிப்பிடத்தக்கச் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளபாட சவால்களை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதோடு,
பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Related News

Total Websites Views

Total Views: 310837

Search

விளம்பரங்கள்