பாதாள உலக கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.!!!
(கொழும்பு செய்தியாளர்)
பாதாள உலக கும்பலுக்குச் சொந்தமான சுமார் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பாதாள உலக கும்பலுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என கூறினார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 354 பவுண் தங்க நகைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தின் மூலம் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் 72 வாகனங்கள், 35 வீடுகள், 34 ஏக்கர் காணிகள் மற்றும் 67 கோடி ரூபா பணம் ஆகியவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.