உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!
Print
சமூக ஊடக உலகில் பெண்கள்: வாய்ப்புகளும் அதிகரிக்கும் சவால்களும்.!!!

Share :

இலங்கைக்கு அவசர எரிபொருள் உதவி: சீனா கப்பல் அனுப்ப தீர்மானம்.!!!

இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில் சீனா அவசர எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், முதலாவது கப்பல் எதிர்வரும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு அநுர குமார திஸாநாயக்க மற்றும் சீனா தூதுவருக்கு இடையில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நடவடிக்கை இலங்கையில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடியை தற்காலிகமாக சமாளிக்க உதவும் முக்கியமான ஆதரவாக பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 744258

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time