உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

போலியான புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் – விசாரணை ஆரம்பம்; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய.!!!

போலியாக வடிவமைக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலை விமான நிலையத்தில் வைத்து தலைவணங்குவது போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த புகைப்படம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713892

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time