ஐ.தே.க.வில் புதிய பதவியில் ஹரின் பெர்னாண்டோ நியமனம்.!!!
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சிக்குள் புதிய சிரேஷ்ட பதவியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்கள், அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.க. வெளியிட்ட அறிக்கையில், இந்த புதிய பதவியின் கீழ் ஹரின் பெர்னாண்டோவின் முக்கிய பொறுப்புகள் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் அவர்களை ஈடுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு அரசியல் கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.