மட்டு.மாவட்டத்தில் கடும் அடை மழை; இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு – பல வீதிகளில் வெள்ளம்.!!!
● 48 மணி நேரத்தில் 134.9 மில்லி மீற்றர் மழை.
(ஜே.கே)
மட்ட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் 134.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பூநொச்சிமுனை பிரதேசத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை கடலுக்கு வடிந்தோடச் செய்ய காத்தான்குடி நகரசபை சாரா ஓடை வெட்டி நீரை கடலுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது .
நீர் தேங்கி நிற்கும் இடங்களிலுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் பணிகளையும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர்.
















