ஹோர்முஸ் ஜலசந்தி திறக்காவிட்டால் “நரகம் பொழியும்”: டிரம்ப் எச்சரிக்கை – ஈரான் கடும் பதில்.!!!
டொனால்ட் டிரம்ப் தனது Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தலைவர்களை “பைத்தியக்காரர்கள்” என கடுமையாக சாடி தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஏப்ரல் 6 திங்கட்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் ஈரானின் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது “நரகமே மழையாகப் பொழியும்” என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மிரட்டலுக்கு பதிலளித்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அதிகாரிகள், டிரம்பின் கருத்தை “முட்டாள்தனமான செயல்” என நிராகரித்துள்ளனர்.
மேலும், தங்களைத் தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் “நரகத்தின் கதவுகள் அமெரிக்கப் படைகளுக்காகத் திறக்கும்” என ஈரான் தளபதி அலி அப்துல்லாஹி (Ali Abdullahi) எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், திங்கட்கிழமை காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், உலக நாடுகள் இந்த பதற்றமான நிலவரத்தை பெரும் அச்சத்துடன் கவனித்து வருகின்றன.