காத்தான்குடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மனிதாபிமான செயல்: அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 50 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.!!!
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, காத்தான்குடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 50 உலர் உணவுப் பொதிகள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் இன்று (03) ஒப்படைக்கப்பட்டன.
அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம். இஜாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மேளனத்தின் பதில் தலைவர் எம்.சீ.எம்.ஏ. சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ரமீஸ் (ஜமாலி), உப செயலாளர் எம்.ஐ.எம். இர்பான் ஆகியோரிடம், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான ஐம்பது உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் ஏ.ஆர். நஸ்லியா, பொருளாளர் எம்.ஜே.எம். ரஸான், முன்னாள் நகரசபை தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை, சம்மேளனத்தின் உப செயலாளர் எம்.ஐ.எம். இர்பான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


