வர்த்தக நிலையங்களில் – நாளை முதல் இலவச ஷொப்பிங் பைகள் வழங்கல் நிறுத்தம்.!!!
வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது, நாளை (நவம்பர் 1) முதல் இலவசமாக ஷொப்பிங் பைகள் வழங்கப்படாது என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை நாளை முதல் விலைப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கான வர்த்தமானியும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் ஷொப்பிங் பைகள் மற்றும் பிற பொலித்தீன் பைகளுக்கு கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.