எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு: அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை.!!!
நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களை கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.
மேலும், வாரத்தின் ஏனைய நான்கு வேலை நாட்களில் பணியாற்ற வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரசாங்க விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.