நாடாளுமன்றத்தில் முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்திய – எம்.பிக்கள் மீது விசாரணை.!!!
நாடாளுமன்ற அமர்வுகளின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 82.1 இன் கீழ், முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
மேலும், அத்தகைய வார்த்தைகள் நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய அமர்வுகளின் போது பயன்படுத்தப்பட்ட முறையற்ற மொழி குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.