இறக்காமம் பிரதி தவிசாளர் ஆஷிக் – பதவியை இராஜினாமா செய்தார்.!!!
இறக்காமம் பிரதி தவிசாளர் என்.எம்.ஆஷிக் தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் முன்னிலையில் இராஜினமா செய்தார்.
சென்ற வாரம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் MP தலைமையில் கடந்த (15) சனிக்கிழமை ஒலுவிலில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானத்ததன் பிரகாரம் இந்த வாரத்திற்குள் தனது பிரதி தவிசாளர் பதவியை NM.ஆஷிக் இராஜினமா செய்வதாக கட்சியின் உயர்மட்டம் கூடி முடிவு செய்தது.
அதன் பிரகாரம் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டு தனது பதவியினை இன்று இராஜினமா செய்துள்ளார்.
பிரதி தவிசாளர் பதவியை என்.எம்.ஆஷிக் முன்கூட்டியே கட்சி வேண்டிக் கொண்டதுக்கு இனங்க தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில் இராஜிமா செய்து கொடுத்திருந்தார்.
அதனையே இன்று இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.முஸ்மி முன்னிலையில் கையளித்ததை தொடர்த்து தவிசாளர் ஊடாக அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான SMM. முஷாரப் முதுநபீன், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் AC சமால்டீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர் A.றியாஸ், உறுப்பினர்களான JK கலிலுல் றகுமான் AJ.சாகிர்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

