ஈரான் தனது முழுமையான ராணுவ சக்தியை இன்னும் வெளிப்படுத்தவில்லை – ஜெனரல் நைனி.!!!
ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி (Ali Mohammad Naini) தற்போது நடந்து கொண்டுள்ள மோதலில் ஈரான் தனது முழுமையான ராணுவ சக்தியை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்று அறிவித்துள்ளார்.
ஜெனரல் நைனி கூறியதாவது, இதுவரை பயன்படுத்தப்பட்ட எல்லா ஏவுகணைகளும் பத்து ஆண்டுகளுக்கு மேல் பழைய தொழில்நுட்பத்தில் உள்ளதாகும். இதன் மூலம் ஈரான் தற்போதைய போரில் தற்காலிக ராணுவ நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.
ஜூன் 2025-இல் நடந்த போரின் பின் தயாரிக்கப்பட்ட புதிய நவீன ஏவுகணைகள் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்றும், இவை பாதுகாப்பாக கையிருப்பில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
“உண்மையான நவீன ஏவுகணைகளின் காலம் இன்னும் தொடங்கவில்லை. அது தொடங்கும்போது அதன் விளைவுகள் கற்பனை செய்ய முடியாததாக இருக்கும்” என ஜெனரல் நைனி வலியுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மார்ச் 15, 2026 அன்று, ஈரான் முதன் முறையாக ‘செஜில்’ (Sejjil) நீண்ட தூர பாயும் ஏவுகணையை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் 60% முதல் 80% வரை செயலிழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஈரான் தரப்பில், இந்த அறிக்கை தனது ராணுவ சக்தியை தற்காப்பாக வைத்துக்கொள்ளவும், எதிரிகளுக்கு வலுவான செய்தியை அனுப்பவும் விடுக்கப்பட்ட தந்திரோபாய எச்சரிக்கை என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.