குருக்கள்மடம் புதைகுழி புகார் இடத்தை; நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பார்வையிட்டார்.!!!
நீதியும் தேசிய ஒருங்கிணைப்பும் தொடர்பான அமைச்சரான வழக்கறிஞர் ஹர்ஷண நாணயக்கார அவர்கள் இன்று (04) குருக்கள்மடத்தில் பொதுமக்கள் புகார் செய்த புதை குழி தொடர்பான இடத்தை நேரில் பார்வையிட்டார்.
அவர் விசாரணைகள் நியாயமான முறையில் நடைபெறுவதாகவும், தொடர்ந்து நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த பார்வையில் காணாமல் போனோர் அலுவலகத்தின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் அமைச்சருடன் இணைந்து அந்த இடத்துக்குச் சென்றார்.



