கடற்கரையில் நீராடச் சென்ற; இருவரின் உயிரை காப்பாற்றிய – பொலிஸார்.!!!
நேற்று (28) மாலை உஸ்ஸன்கொட கடற்கரையில் நீராடச் சென்ற இருவர், எதிர்பாராதவிதமாக அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும், கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் விரைந்து செயல்பட்டு இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஹூங்கம பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 34 வயதுடையவர்களே சிக்கியுள்ளனர். உயிர்காக்கும் அதிகாரிகள் உடனடியாக அவர்களை மீட்டு, முதலுதவி அளித்த பின்னர், அவர்களது பாதுகாவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த உயிர்காக்கும் பணியில் பொலிஸ் சார்ஜென்ட் 55986 அனுர, பொலிஸ் கான்ஸ்டபிள் 99168 துலாஜ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 104435 சரத்சந்திர ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.