உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

தோழர் கந்தசாமி பிரபு தலைமையில்; தியாவட்டவான் சாலை அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.!!!

(அஹமட் இர்ஷாட்)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், “கிராமப்புற வளர்ச்சிக்கான புதிய அடித்தளம்” எனும் திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தியாவட்டவான் (210C) சமுர்த்தி குறுக்கு வீதி, ரூ.2 கோடியே 22 இலட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு தலைவருமான கந்தசாமி பிரபு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் அப்துல்லாஹ், பிரதேச சபை உறுப்பினர்கள், திட்டமிடல் பணிப்பாளர் றுவைத், தேசிய மக்கள் சக்தியின் தியாவட்டவான் வட்டாரக்குழுத் தலைவர் பவுர்டீன், பிரதேச நிறைவேற்று குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709476

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time