காத்தான்குடி மீடியா போரம் – உறுப்பினர்களுக்கு மடிக்கணினி பை வழங்கி வைப்பு.!!!
(எம்.ரி எம்.யூனுஸ்)
காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கு மடிக்கணணி பை வழங்கும் நிகழ்வு இன்று (06) சனிக்கிழமை காத்தான்குடி அல்-பஜ்ர் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமானஎம்.எஸ்.எம். நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் செயலாளரும், கலாசார உத்தியோகத்தருமான, அஷ்ஷெய்க் எம்.ஐ. ஜவாஹிர் (பலாஹி) மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
காத்தான்குடி மீடியா போரத்தின் ஆயுட்காலத் தலைவா் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) உட்பட காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டில் வதியும் தனவந்தரின் அன்பளிப்பின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட மடிக்கணணி பைகள் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கு ஊடக கடமையினை செவ்வனே செய்வதற்காக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















