உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கோறளைப்பற்று மத்தி புதிய பிரதேச செயலாளராக பெண்.!!!

(நமது செய்தியாளர்)

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக எம்.ஏ.சி.றமீஸா இன்று (10) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2017.11.01ம் திகதியிலிருந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய எஸ்.எச்.எம்.முஸம்மில் 2025.02.03ம் திகதி ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே றமீஸா பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2012/01/02ம் திகதி இலங்கை நிர்வாக சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து காத்தான்குடி பிரதேச செயலகத்திலும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திலும், உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

2019/07/29ம் திகதியிலிருந்து வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திலும் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி தமது செயலக பிரிவு மக்களுக்கு சேவைகளை வழங்கிவந்த நிலையில் பதவி உயர்வு பெற்று இன்று 2025/02/10ம் திகதி புதிய பிரதேச செயலாளராக தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719212

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time