ஹஜ் விசா பெற கட்டாயமாக அரசு மருத்துவச் சான்றிதழ் – கடுமையான நோய்களுக்கு சவுதி புதிய விதிமுறைகள்.!!!
(அஷ்ரப் ஏ சமத் )
இம் முறை இலங்கையிலிருந்து ஹஜ்ஜூக்கு செல்ல உள்ளவர்கள் கட்டாயமாக மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும். அதன் பின்பே சவுதி அரசாங்கம் விசா வழங்குவதாகவும் சவுதி அரசின் ஹஜ் பிரிவினர் தங்களுக்கு அறிவித்துள்ளனர் மிகப் பாரதுரமான ஆறு நோய்களுக்கு அரச மருத்துவச் சான்றிதழை பெற்றுக் கெள்ளமாறும் அறிவுறுத்தியுள்ளதாக ஹஜ் கமிட்டியின் தலைவர் றியாஸ் மிஹ்லார் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து ஹஜ் செல்பவர்களது மருத்துவச் சான்றிதழ்களை கண்கானிப்பதற்காக எமது கமிட்டியினால் வைத்திய அதிகாரி சிஹான் என்பவரை நியமித்துள்ளோம். நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளிலேயே ஹஜ் செல்ல உள்ளவர்கள் இம் முறை அரச மருத்துவச் சான்றிதழ்களை பெறல் வேண்டும் அச் சான்றிதழ்களை எமது வைத்திய அதிகாரியின் ஊடாக பரிசிலனை செய்யப்படும். சவுதி அரசின் பின்வரும் கடுமையான நோய்களான புற்றுநோய், இதய துடிப்பு, சிறுநீரக நோய் மற்றும் கடுமையான சர்க்கரை வியாதி ,நான்கு அல்லது 5 மாத கர்ப்பினி போன்ற நோய்களுக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்குமாறு வேண்டியுள்ளது.
பொய் மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தால் அவர்கள் சவுதியில் பரிசீலித்து மீள அதே விமானத்தில் அனுப்பிவிடுவார்கள். அவர்களுக்கு ஹஜ் செய்ய முடியாமல் போகிவிடும் . இம்முறை சவுதி அரேபியா ஹஜ் விடயத்தில் மிகவும் பல கடினமான நிபந்தனைகளை விதித்து்ளளதாகவும் ஹஜ் கமிட்டியின் தலைவர் றியாஸ் மிப்லார் தெரிவித்தார்.