காத்தான்குடி புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உபதேசக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு.!!!
(BM.பயாஸ்)
காத்தான்குடியின் புதிய பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அழககோன் (IP) மற்றும் பொலிஸ் உபதேசக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (20) இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் பிரதேசத்தில் நடைபெறும் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு, சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் பெண் மாணவிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை சட்டப்படி கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன.
எதிர்கால செயல்பாடுகள் மற்றும் வன்முறையற்ற, ஊழல் இல்லா சமூகத்தை கட்டியெழுப்புவது தொடர்பாக புதிய நிலையப்பொறுப்பதிகாரியால் விளக்கமளிக்கப்பட்டது.
இதில் சிவில் பொறுப்பதிகாரியும், பொலிஸ் உப பரிசோதகருமான ஜெயசேகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உபதேசக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.





