உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பில் மினி சூறாவளி தாக்கம் – ஆரையம்பதியில் மரங்கள் முறிந்து மின்சாரம் துண்டிப்பு.!!!

( காத்தான்குடி செய்தியாளர்)

மட்டக்களப்பு – ஆரையம்பதிப் பகுதியில் இன்று (24) வீசிய மினி சூறாவளியால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பலத்த காற்றின் தாக்கத்தால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், சில இடங்களில் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கும் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், முறிந்து விழுந்த மரங்கள் மின் கம்பிகள் மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளில் விழுந்ததன் காரணமாக, ஆரையம்பதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மினி சூறாவளியானது, வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்திருந்த பொதுவான வானிலை எச்சரிக்கைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளவும், பாதுகாப்பாக இருக்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மின் விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709320

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time