பருவமழை தாக்கம் தீவிரம் – வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் தொடர்ந்து மழை.!!!
வடகிழக்கு பருவமழை நாட்டின் ஊடாக படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டு வருவதால், இன்று (06) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்குதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடியதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.