நாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு; நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் நடவடிக்கை.!!!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று (28) நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த வழக்கு விசாரணைக்கு அவர் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, இந்த உத்தரவு இன்று (28) பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.