ஓட்டமாவடி பிரதேச சபை — அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது.!!!
ஓட்டமாவடி, கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம். எஸ். ஹலால்தீன் இன்று (20) காலை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தவிசாளர் தெரிவில், ஐக்கிய தேசியக் கட்சி, சுயேட்சை உறுப்பினர், மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் தலா ஒருவர் என தங்கள் ஆதரவை வழங்கினர்.
முன்னாள் தவிசாளர் பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதுடன், தவிசாளர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் அஸ்மி தலைமையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இந்த தெரிவின் மூலம், ஓட்டமாவடி பிரதேச சபையின் நிர்வாகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளது.






