தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் – 06 வான் கதவுகள் திறப்பு.!!!
(கற்பிட்டி – எம்.ஹெச்.எம். சியாஜ்)
தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் நேற்று (18) மாலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 4 வான்கதவுகள் தலா 03 அடி திறக்கப்பட்டுள்ளன. 2 வான்கதவுகள் தலா 02 அடி திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வினாடிக்கு 11,150 கன அடிநீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்மட்டம் உயர்வது கவலைக்குரிய நிலையில் உள்ளதால், கீழ்நீர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.