ஓட்டமாவடி தவிசாளர் பைறூஸின் – இடைக்காலத் தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு.!!!
ஐக்கிய மக்கள் சக்தியினால் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலத்தடை விதிக்குமாறு கோரிய வழக்கு எதிர்வரும் 23.10.2025ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டமையை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையை நீக்குவதாக எழுத்து மூல அறிவிப்பை விடுத்திருந்த நிலையிலேயே குறித்த இடைக்காலத்தடை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


