தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பில் – ஜனாதிபதி கம்பெனிகாரர்களுடன் கலந்துரையாடல்.!!!
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், தோட்டத் தொழிற்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்விடயத்தில் அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


