ஈரானில் சிக்கிய அமெரிக்க கேர்னல் மீட்பு: அமெரிக்க விமானங்களே அழிக்கப்பட்டது.!!!
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தில் இருந்து உயிர் தப்பிய அமெரிக்க கேர்னல் ஒருவரை கடுமையான மீட்பு நடவடிக்கையின் மூலம் அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக மீட்டுள்ளன.
இதனை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானில் சிக்கியிருந்த இரண்டாவது அமெரிக்க வீரரை மீட்கும் பணியின் போது, அமெரிக்கப் படைகளே தங்களின் இரண்டு போர் விமானங்களை அழித்துள்ளதாக The Wall Street Journal தகவல் தெரிவிக்கிறது.
இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்ட் கோர்ப்ஸ் (IRGC) எதிர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றொரு அமெரிக்க விமானத்தை இஸ்பஹான் பகுதியில் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது.
இந்த சம்பவம் மத்திய கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் படையளவு நடவடிக்கைகள், மீட்பு முயற்சிகள் மற்றும் விமானம் அழிப்பு சம்பவங்கள் தொடர்பான பரபரப்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.