பாடசாலைகளில் பணி புரியும்; ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான தொற்றாநோய் பரிசோதனை.!!!
(பாறுக் ஷிஹான்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீர் தலைமையில் இவ்வாரம் காரைதீவு பிரதேச பாடசாலைகளில் பணி புரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான தொற்றாநோய்களுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம் காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றன.
இதில் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதாரப் பரிசோதர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது குருதி குளுக்கோஸ் மட்ட பரிசோதனை, உடல் திணிவு சுட்டி பரிசோதனை மற்றும் குருதி அமுக்க பரிசோதனை போன்றன மேற்கொள்ளப்பட்டன.



