காத்தான்குடி பிரதேச செயலகத்தில்; கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் – செயிரி வாரம்.!!!
(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் )
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றும் நோக்கில் அரசாங்கம் விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
“செயிரி வாரம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் 1 முதல் 4 வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதற்கமைய காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹார மவ்ஜுத் தலைமையில் இன்று (02) பிரதேச செயலக வளாகம் மற்றும் அலுவலகத்தில் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு, தேவையற்றவை அப்புறப்படுத்தப்பட்டன.
அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் ஆபத்தற்ற சூழலில் தங்கள் கடமைகளைச் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அதேபோல், “செயிரி வாரம்” நடைமுறையில் அரசு நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் வழிகாட்டுதல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், இந்த திட்டம் க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.














