இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு: போரில் காயமடைந்த வீரர்களை சந்தித்த கடற்படைத் தளபதி.!!!
(கற்பிட்டி, B.M. சியாஜ்)
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட புதன்கிழமை (10) வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் (Anchorage Naval Care Center) தங்கியுள்ள போர் வீரர்களை நேரில் சந்தித்தார்.
சந்திப்பின் போது, போரில் காயமடைந்த வீரர்கள் நலன் மற்றும் தேவைகளை நேரடியாக கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் நலனின் அடிப்படையில் வேலைத்திட்டங்கள் நடைபெறும் என்று கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
இந்த நிகழ்வு, போரில் சேவை செய்த வீரர்களின் நலனை கருத்திற்கொள்ளும் கடற்படையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் மிக முக்கியமானதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





