ஜனாதிபதி அநுர – நாமல் ராஜபக்ஷ ஒரே விமானத்தில் பயணம்.!!!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநயாக்கவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஸவும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அதிகார விஜயமொன்றை மேற்கொண்டு மாலே நகருக்குச் சென்றுள்ளார்.
அதே நேரத்தில், நாமல் ராஜபக்ஸவும் அங்கு நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மாலைத்தீவிற்கு சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் கொழும்பு முதல் மாலே வரை பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL – 101 இன் வணிக (Business Class) பிரிவில் இருந்துள்ளனர்.
குறித்த தற்செயலான சந்திப்பு அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு ஆர்வத்தைக் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளையில், நாமல் ராஜபக்ஸவை கைது செய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவராந்து உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.