வரி வசூலில் வரலாறு படைத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் — புதிய வரி செலுத்துவோர், நிறுவனப் பதிவு கணிசமான உயர்வு.!!!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல், இதேகாலத்தில் 18,000 புதிய நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், வரி பதிவு மற்றும் வருமான வசூல் தொடர்பாக பல முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது: இந்த ஆண்டுக்கு, கடந்த ஆண்டை விட 18% அதிக வருமான இலக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த வாரத்தில், வரலாற்றிலேயே அதிகபட்ச வருமான இலக்கான 2 டிரில்லியன் ரூபாவைத் தாண்டிய வருமானத்தை திணைக்களம் ஈட்டியுள்ளது. இதுவரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மொத்தம் 2,080 பில்லியன் ரூபாய் வருமானம் பெற்றுள்ளது.
வருமான இலக்குகளை தொடர்ந்து உயர்த்திய நிலையில், திணைக்களம் புதிய வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனப் பதிவை அதிகரித்துள்ளது. இது நாட்டின் வருவாய் நிலைமையை பலப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
மேலும் வருமான வசூல் வலுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என திணைக்களம் அறிவித்துள்ளது.