போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க – துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்.!!!
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்து, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையில் புதிய துரித தொலைபேசி இலக்கம் ‘1818’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இலக்கத்தின் மூலம், பொதுமக்கள் நாடு முழுவதும் நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் குறித்த துல்லியமான தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.