“சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை” திட்டத்தின் கீழ்: வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு.!!!
(றியாஸ் இஸ்மாயில்)
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, “சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (06) திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளினை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால்அட்டாளைச்சேனை,
பாலமுனை, மற்றும் திகவாபி ஆகிய பிரதேசங்களில் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஐரங்கனி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் மஜீட்,
கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார் ஆசிரியர் கலந்து கொண்டனர்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களான சமன், ஜனூஸா, பஹிமா,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர்கள் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்,
அட்டாளைச்சேனை, பாலமுனை, திகவாபி தேசிய மக்கள் சக்தியின் வட்டார அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




