உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஜப்பானின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை; இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை.!!!

ஜப்பானின் வடக்கு கடற்கரைப் பகுதியில், குறிப்பாக ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களுக்கு அருகில், இன்று 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. சுமார் 3 மீட்டர் (10 அடி) உயரம் கொண்ட சுனாமி அலைகள் வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆமோரி, ஹொக்கைடோ மற்றும் இவாடே (Iwate) கடற்கரைப் பகுதிகளுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தின் தீவிரம் ஹச்சினோஹே (Hachinohe) உள்ளிட்ட ஆமோரி நகரங்களில் ஜப்பானிய அளவுகோலில் ‘அப்பர் 6’ (upper 6) ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது மிகக் கடுமையான குலுக்கலைக் குறிக்கிறது.

இலங்கைக்கு எந்தவிதமான சுனாமி ஆபத்தும் இல்லை என, இலங்கை தேசிய சுனாமி ஆரம்ப எச்சரிக்கை மையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre – DMC) இணைந்து உறுதிப்படுத்தியுள்ளனர். பசுபிக் கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், புவியியல் ரீதியாக இலங்கையிலிருந்து தொலைவில் உள்ளது மற்றும் நிலப்பரப்புகளின் அமைப்பால், ஜப்பானில் ஏற்படும் சுனாமிகள் பொதுவாக இந்தியப் பெருங்கடலில் உள்ள இலங்கையை பாதிப்பதில்லை.

இதனால், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளும் பாதுகாப்பான நிலையில் உள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703014

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time