காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் – அஹதிய்யா கற்கை நெறி ஆரம்பம்.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
றவ்ழா ஹதீஜா அஹதியா பாடசாலையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அஹதிய்யா கற்கை நெறியை மட்/மம/ ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (24) பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.ஐ.யாஸிர் அறபாத் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் றவ்ழா ஹதீஜா அஹதியா பாடசாலையின் அதிபர் மெளலவியா எம்.என். மஹ்பூ நிஸா மஹ்ரூப் , பொருளாளர் யூ.எல்.எம்.அஸ்ஹர் (ஜமாலி), காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை செயலாளர் எம்.ஐ. எம்.ஜவாஹிர்(பலாஹி) ,ஹிழுறிய்யாஹ் பள்ளிவாயல் பேஷ் இமாம் இஸட்.ஏ.எம்.நெளஸர்(ஹுமைதி), செயலாளர் எம்.அஜ்வத் , ஊடகவியலாளர் எம்.ஐ.ஏ.மஜீட் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
தரம் 1- 3வரையுள்ள கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள்
அஹதிய்யா கற்கை நெறியை தங்களது பாடசாலையில் ஆரம்பிக்க கேட்டுக்கொண்டதால் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களிடம் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்டகோரிக்கைக்கு இணங்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கற்கை நெறி ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வமான கடிதம் அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.



