அநீதி இழைக்கப்பட்ட காணி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம்; தீர்வு கிடைக்கும் வரை தொடரும்.!!!
ஓட்டமாவடியில் அநீதி இழைக்கப்பட்ட காணி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2002-ம் ஆண்டு தொடக்கம் ஓட்டமாவடி – கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிர்வாகத்திற்குரிய 6-கிராம சேவகர் பிரிவுகளின் நிர்வாகக் கடமைகளை சட்டப்படி கையளிக்காமல் புறக்கணிப்புச் செய்துவரும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சுக்கு எதிரான சாத்வீக வழிப் போராட்டம் ஓட்டமாவடி சமூக மட்ட அமைப்புக்களால் தொடர்ந்து முன்னெடுப்புச் செய்யப்படுகின்றது.
ஓட்டமாவடி பொதுச்சந்தை வட்டாரத்தில் சுமார் 47-நாட்களாக இடம்பெற்றுவரும் இப்போராட்டத்தினை கல்குடா “சூரா கௌன்சில்” (மஜ்லிஸ் ஷூரா) முன்னெடுத்து வருகின்றது.
இந்தப் போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


