காத்தான்குடி நகரசபையின் அறிவிப்பு; பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகள் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.!!!
காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள், தங்கள் காணி தொடர்பான விவரங்களை உடனடியாக நகரசபைக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நகரசபையினால் இதற்கு முன்பு பலமுறை அறிவுறுத்தப்பட்டபோதிலும், சிலர் இந்நெறிமுறைகளை பின்பற்றாமல் தங்கள் காணிகளை சுகாதாரத்துக்கு அபாயமாக விடுவித்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இனிமேல் இவ்வாறு பராமரிப்பின்றி காணப்படும் காணிகள் இனங்காணப்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், ரூபா. 2 லட்சம் வரை தண்டப்பணம் விதிக்கப்படலாம் அல்லது சம்பந்தப்பட்ட காணி நகரசபைக்கு சொந்தமாக்கப்படும் என்பதையும் நகரசபை தெரிவித்துள்ளது.








