மட்டு நகரில் எரிபொருள் பவுசர்; மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் மோதியதில் – பெண் படுகாயம்.!!!
மட்டு நகரில் உள்ள புகையிரத சந்தி வீதிக்கடவையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் பவுசர் மோதியதில் பெண் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
40 ஆயிரம் எரிபொருளுடன் பயணித்த இந்த பவுசர் சம்பவ இடத்தில் கவிழ்ந்து இருந்தால் நகரில் இன்று பாரிய ஒரு அனர்த்தம் ஏற்பட்டிருக்கும்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் எரிபொருள் பவுசரை அவ்விடத்தில் இருந்து அகற்றினர்.
அத்துடன் ஏற்பட்ட விபத்துச் சம்பவம் குறித்து போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.