உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

முப்பதாவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும்; மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா மஸ்ஜித் – ஜமாஅத்தார் சங்கம்.!!! 

(ஜே.கே)

கிழக்கிலங்கையின் முஸ்லிம்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா மஸ்ஜித் ஜமாத்தார் சங்கம் 30 ஆவது ஆண்டு நிறைவிழாவை கொண்டாடுகிறது .

எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள குறித்த ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக ஆராயும் ஜமாஅத்தார் சங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று காலை சமூக, அரசியல் செயற்பாட்டாளர் அல்ஹாஜ் எச் எம் எம் முஸ்தபா ஜேபி அவர்களின் வாசஸ்தலத்தில் ஜமாத்தார் சங்கத்தின் தலைவரும், முன்னாள் நகர சபை உறுப்பினருமான அல்ஹாஜ் ரீ. எல். ஜெளபர்கான் ஜேபி தலைமையில் நடைபெற்றது.

ஜமாஅத்தார் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். அப்துல் காதரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஜமாஅத்தார் சங்கத்தின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம் முகைதீன் சாலி எல் எல் பி, ஆலோசர்களான தேசமானிய ஏ எல் மீராசாஹிப், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ.ஹுசைன், சங்கத்தின் உப தலைவர் அல்ஹாஜ் எச் எம் எம் முஸ்தபா ஜேபி, பிரதிச் செயலாளர் அஷ்ஷெய்க் அல்ஹாபில் எம் ஐ எம் அஸ்ஹர் ஜமாலி, உப பொருளாளர் எம்.ஐ.எம்.மபாஸ் ஊடக செயலாளர் எம்.ஐ.அப்துல் நஸார்,நிர்வாக உறுப்பினர்களான மர்சூத் ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்

ஜமாஅத்தார் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

அரசியல், சமூக, கல்வியாளர்கள் பலர் குறித்த ஆண்டு விழா கொண்டாட்டங்களில் அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா மஸ்ஜித் தலைவர்களாக இருந்து பெரும் பணியாற்றி இறையடி சேர்ந்தவர்கள் குறித்த நிகழ்வின் போது கௌரவிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1995ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தார் சங்கம் கடந்த மூன்று தசாப்தங்களாக சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார, சமுக நல்லிணக்கத் துறைகளில் பாரிய பங்களிப்புக்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது .

Related News

Total Websites Views

Total Views: 212882

Search

விளம்பரங்கள்