உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மட்டக்களப்புக்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர்; கங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை.!!!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு இன்று (27) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது மட்டக்களப்பு கங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது இறங்குதுறை அமைத்தல், களப்பு மற்றும் ஆற்றை ஆழப்படுத்தல், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுத்தல் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மீன்பிடி வசதிகளை மேம்படுத்தல், உயர் தரத்திலான வலைகளை அறிமுகம் செய்தல், கடலுக்கு செல்லும் மீனவர்கள் சுகவீனம் ஏற்படும் போது அவர்களை மீட்பதற்கான விசைப்படகின் தேவை கடற்றொழிலாளர்களினால் இங்கு வலியுறுத்தப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், சட்ட விரோத மீன்பிடியை தடுத்து கடலையும், கடல் வளத்தையும் பாதுகாப்பிற்கு தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குருஸ், மீனவ சங்க தலைவர்கள், கடற்றொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718667

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time