உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

மட்டக்களப்பில் ஊடக அமைச்சினால்;  உணவு பாதுகாப்பு தொடர்பான –  பயிற்சி செயலமர்வு.!!!

மட்டக்களப்பு மாவட்ட ஊகவியலாளர்களுக்கான உணவு பாதுகாப்பு தொடர்பான அறிக்கையிடல் பயிற்சி செயலமர்வானது வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்

வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி.செவ்வந்தி வெகுஐன ஊடக அமைச்சின் ஊடக பணிப்பாளர் கே.பி.ஐயந்த தலைமையில் தனியார் விடுதியில் (12) இடம் பெற்றது..

வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் (FAO) செயற்திட்டத்தின் அனுசரனையின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு நடைபெற்றன.

இச் செயலமர்வின் வளவாளார்களாக உணவு மருந்து பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்சன், கலாநிதி ஶ்ரீ பிரிந்தன் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது உணவுப் பாதுகாப்பு தொடர்பான சட்டதிட்டங்கள், உணவுப்பாதுகாப்பு தொடர்பான சமூக ரீதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் இதன் போது தெளிவூட்டப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அதிகாரி யூடி தீபன் பெரேரா, மற்றும் டினா ஜயரத்னம், மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன் என பலர் கலந்து கொண்டனர்.

Related News

Total Websites Views

Total Views: 195813

Search

விளம்பரங்கள்