காணாமல் போன தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த; பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்.!!!
பொத்துவில் – மட்டக்களப்பு இடையிலான பேருந்து பயணத்தின் போது, ஒரு பெண் பயணியிடம் இருந்த தங்க நகை காணாமல் போனது. தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் கூட, பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தங்கள் நேர்மையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பேருந்து சேவை முடிந்த பின் வாகனத்தை சுத்தம் செய்யும் போது அவர்கள் அந்த தங்க நகையை கண்டெடுத்து, உடனடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு நகையை பாதுகாப்பாக கையளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பலரும் இவர்களை “நேர்மையின் முன்னுதாரணம்” என பாராட்டி வருகின்றனர்.
மக்கள் தங்கள் உடமைகளுடன் பாதுகாப்பாக இவர்களின் பேருந்தில் பயணிக்கலாம் என்பதற்கான உயிரோடு இருக்கும் சான்றாக இந்த நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.
“இவர்களின் மனிதநேய செயல் – அனைவருக்கும் ஒரு முன்மாதிரி”
