கிழக்கில் அமைதியான முறையில் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்டம்; காத்தான்குடியில் ஹஜ் பெருநாள் தொழுகையில் பெருமளவிலான மக்கள்.!!!
(ஜே.கே)
இன்று மலர்ந்துள்ள ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரை திடலில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற தொழுகையையும் குத்பாவையும் அஷ்ஷெய்க் அஸ்பர் ஹசன் பலாஹி அவர்கள் நடாத்தினார்.
பெருநாள் குத்பாவையொட்டி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.