மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம்.!!!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று (24) ஓட்டமாவடி மற்றும் காங்கேயனோடை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் (பா.உ) மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதன்போது, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச மத்திய குழு உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.




