161 வது பொலிஸ் ரணவிரு தின கிழக்கு மாகாண வைபவம்; மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு.!!!
(ஜே.கே)
161 வது பொலிஸ் வீரர்கள் ரணவிரு தினம் இன்று (21) மட்டக்களப்பு மாவட்டத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்திற்கான பிரதான வைபவம் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை முன்றலில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்ன தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண் ஜெயசுந்தர பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொலிஸ் நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்.
மரணித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தினர்.
உதவி பொலிஸ் அத்தியாச்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.












