ஏறாவூரில் பழைய இரும்புக் கடையில்; பாரிய தீ விபத்து.!!!
மட்டக்களப்பு ஏறாவூர் மிச் நகர் தாமரை கேணியில் உள்ள பழைய இரும்பு கடையில் இன்று (08) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவு மற்றும் ஏறாவூர் நகர சபை, பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீயினால் பெரும் தொகையான பொருட்களும் சேதமடைந்து உள்ளன.
தீ பரவல் குறித்து ஏறாவூர் பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.